தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் ஆண்டனி தற்போது 'ரோமியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயரிலேயே இசை நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். இதற்காக கோவை சென்ற விஜய் ஆண்டனி அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இது தேர்தல் காலம் என்பதால் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் வருமாறு:
‛‛நான் வர வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டால் வரலாம். மற்றபடி எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடிமகனாக நிச்சயம் ஓட்டு போடுவேன். நீங்களும் ஓட்டுப் போட வேண்டும். நோட்டாவுக்கு போடுவதை விட, யாருக்காவது ஓட்டு போடுங்கள். ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள். கடந்த ஐந்து ஆண்டில் என்ன செய்திருக்கிறார்கள் என ஐந்து நிமிடம் யோசித்து ஓட்டுப் போடுங்கள். சின்ன படமோ, பெரிய படமோ கதை நன்றாக இருந்தால் வெற்றி பெறும்'' என்றார்.