தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே படம் இயக்கும் எண்ணம் அவரது மனதில் இருந்தது. அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 'பரோஸ்' என்கிற வரலாற்று படத்தை இயக்கத் துவங்கினார் மோகன்லால். இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மோகன்லால். அவருக்கு இயக்குனர் சங்க உறுப்பினர் அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அதை பகிர்ந்து கொள்வாரோ அதே மகிழ்ச்சியுடன் தனது உறுப்பினர் அட்டையை சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் மோகன்லால்.