பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
கடந்த மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை மற்றும் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப்பெரியவன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதனால் ஜாபர் சாதிக் கைதானபோது அவருடன் அமீரையும் இணைத்து சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர் ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இயக்குனர் அமீரிடத்திலும் விசாரணை நடத்துவதற்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி டில்லியில் உள்ள போதைப் பொருள் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.