ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை மற்றும் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப்பெரியவன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதனால் ஜாபர் சாதிக் கைதானபோது அவருடன் அமீரையும் இணைத்து சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர் ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இயக்குனர் அமீரிடத்திலும் விசாரணை நடத்துவதற்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி டில்லியில் உள்ள போதைப் பொருள் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.