தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த். போதை மருந்து விவகாரத்தில் கைதாகி உள்ளே சென்று வந்ததால் இந்த நிகழ்ச்சி, புரமோஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் மாதிரி அவரும் படம் ரிலீஸ் ஆக, தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து இருக்கிறார். அது பற்றி யாருமே பேசவில்லை. அவருக்கு திரையுலகில் கூட பெரியளவில் ஆதரவு இல்லை. அவருக்கு உதவினால், அவருடன் பேசினால் போதை மருந்து விவகாரத்தில் தங்கள் பெயர் வருமோ என்று பயந்து பலர் ஒதுங்கி இருக்கிறார்களாம். இதேபோல் அமீரும் கையில் இருக்கும் படத்தை முடிக்க முடியாமல், புதுப்படங்களை கமிட் செய்ய முடியாமல் தவிக்கிறாராம். வெப்சீரிஸ் மற்றும் சில படங்களில் நடித்து வரும் 'கழகு' கிருஷ்ணாவின் எதிர்காலமும் இந்த வழக்கால் முடங்கி போய் உள்ளது. இந்த விவகாரத்தால் கோலிவுட்டில் பார்ட்டிகள் நடத்தப்படுவது கணிசமாக குறைந்துள்ளது.