தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய சினிமாவை தாண்டி ஆஸ்கர் வரை வென்று சாதித்தவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏஆர் ரஹ்மானின் இசைக்கு பெரும் பங்காற்றியது அவரது பஞ்சதன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோவில் இருந்து அவரின் சினிமா பயணம் றெக்க கட்டி பறக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம். இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் எம்மி பால், 74. உடல்நலக்குறைவால் இவர் நேற்றுமுன்தினம் சென்னையில் காலமானார்.
எம்மி பால் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛பஞ்சதன் ஸ்டுடியோவில் தான் எனது பெரும்பாலான இசை உருவாக்கப்பட்டது. அந்த ஸ்டுடியோவின் நிஜ கட்டடக் கலைஞரான எம்மி பாலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.