தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகைகள் என்றாலே அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் இயல்பான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்களது பிரபலத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு மக்காளகவும் பயணிப்பார்கள்.
அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் 'வேட்டையன்' நடிகை ரித்திகா சிங். மும்பையில் நெருக்கடியான லோக்கல் டிரையினில் பயணித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது ஹேன்ட்பேக்கில் நிறைய கீ செயின்கள் இருப்பதை அந்த பையன்கள் பார்த்து இன்னும் கூடுதலாக சேர்த்துவிட்டார்கள். அவர்களுக்கு என்னை ஞாபகமில்லை, காரணம் நான் எப்போதுமே மாஸ்க் அணிவேன். ஆனால், அவர்களை நான் கடந்த வாரம் கூடப் பார்த்தேன். அவர்களைத் தவிர்க்க நினைத்தேன், ஆனால், நேற்று அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் வந்த புதிதில் நடிகர் ஆர்யா கூட அதில் அடிக்கடி பயணம் செய்து வந்தார். இப்போதெல்லாம் பயணிப்பதில்லை போலிருக்கிறது. பொதுப் போக்குவரத்தை சினிமா பிரபலங்கள் பயன்படுத்துவது மிகவும் அபூர்வமானதுதானே.