வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சில இயக்குனர்களும், சில நடிகர்களும் இணைந்தே பயணிப்பார்கள். அவர்களுக்குள் சினிமா தாண்டி ஒரு நட்பு ஏற்பட்டிருக்கும். இவர்களை ஆஸ்தான இயக்குனர்கள், ஆஸ்தான நடிகர்கள் என்ற குறிப்பிடுவார்கள். ரஜினிக்கு எஸ்.பி.முத்துராமன், கமலுக்கு கே.பாலச்சந்தர். சிவாஜிக்கு திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்கு நீலகண்டன், விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமிக்கு, சூர்யாவுக்கு ஹரி இப்படியான பட்டியல் அதிகம்.
அந்த வரிசையில் ஜெய்சங்கரின் ஆஸ்தான இயக்குனர் மதுரை திருமாறன். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் 1971ம் ஆண்டு 'சூதாட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். 50 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள இவர் ஜெய்சங்கரை வைத்து மட்டும் 20 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். சொந்தங்கள் வாழ்க, திருடி, மேயர் மீனாட்சி, தாய் வீட்டு சீதனம், இளையராணி ராஜலட்சுமி, ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள்.