தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

துபாய் : 2016 ஆண்டு முதல் தொடர்ச்சியாக அமீரக தமிழர்களின் மேடை நாடக ஆர்வத்தை வளர்த்து வரும் அமீரக குறுநாடக குழுவினர், கொரோனா பீதி சமயத்தில் மேடைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் குறும்படங்கள் இயக்க தங்கள் குழுவினரை ஊக்குவித்தனர்.
2020ம் ஆண்டு முதல் தற்போது நான்காம் ஆண்டாக நடைபெறப்போகும் இவ்விழாவில் பங்கு கொள்ள அமீரகத் தமிழர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமும், தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னோடிகளில் ஒருவருமான நடிகை குட்டி பத்மினி நடுவராக இந்த விழாவிற்கு தலைமையேற்கிறார்.
35க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். படங்கள் திரையிடப்படும் தேர்வு வரிசையை வீடியோ மூலம் வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கபடுத்தினார் நடுவர். பதிவு முறை மூலம் மட்டுமே, 13ம் தேதி குட்டி பத்மினி அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும், ஏப்ரல் 14 காலை படங்களை பார்க்கவும் இயலும்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த குறும் படங்கள் வெளியிடப்பட்டு அன்று மாலையே வெற்றியாளர்களுக்கு 12 பிரிவில் 28 வகையான பரிசுகளும், பங்கு கொண்டவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் ரமா மலர் தெரிவித்தனர்.