தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‛கோட்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பிரசாந்த், ‛கோட்' படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், கோட் படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போதே சொல்ல விரும்பவில்லை. ஆனால் வித்தியாசமான வேடம். மற்றபடி ரிலீசுக்கு பிறகு அதை தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த்.