மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இரண்டு தளங்களிலும் ஒன்றாக கால் பதித்து இரண்டிலுமே வெற்றி பெற்றார். ஆனாலும் அதைத்தொடர்ந்து டைரக்ஷன் பக்கம் போகாமல் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமாரிடம் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது பேசிய சசிகுமார், அது உண்மையிலேயே தான் சிரித்த சிரிப்பு அல்ல என்றும் அந்த படத்தின் டப்பிங்கின் போது நகைச்சுவை நடிகராக நமோ நாராயணனை தனக்கு பதிலாக சிரிக்க வைத்து டப்பிங்கில் சேர்த்துக் கொண்டதாகவும், ஆனால் இப்போது வரை அதை தனது சிரிப்பாக நினைத்து பலரும் மிமிக்ரி பண்ணி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல அந்தப் படத்தில் ஜெய் ஸ்டைலாக தலையை கொதி விடுவது இயல்பிலேயே தன்னுடைய மேனரிசமாக இருந்தது என்றும் சுப்ரமணியபுரம் படத்தில் அந்த ஸ்டைலை ஜெய்க்கு கற்றுக் கொடுத்ததாகவும் கூறிய சசிகுமார் அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தபோது அதேபோன்று தானும் ஸ்டைலாக தலையை கோதியபோது இயக்குனர் தன்னிடம் சார் இது ஜெய் ஸ்டைல் போல இருக்கிறது, வேறு மாதிரி செய்யுங்கள் கூறினாராம். இப்படி தன்னுடைய ஸ்டைல் ஒன்று ஜெய்க்கு கை மாறியது குறித்து இன்னொரு புதிய தகவலையும் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்.