இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்தாண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான ‛சித்தா' படம் வரவேற்பை பெற்றது. தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் இவர் பங்கேற்றார். அதில் அவருக்கு இந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சித்தார்த், ‛‛சித்தா படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை என எந்த பெண்ணும் கூறவில்லை. ஆனால் சில ஆண்கள் கூறியதாக என்னிடமும், இயக்குனர் அருண்குமாரிடமும் கூறினார்கள். மிருகம் என தலைப்பு வைத்த படத்தை பார்க்கிறார்கள். ஆனால் என் படத்தை பார்க்கும்போது அவர்களுக்கு தொந்தரவாக இருந்ததாம். இதற்கு பெயர் தொந்தரவு இல்லை. வெட்கமும், குற்றவுணர்வும்... பரவாயில்லை போகப் போக சரியாகிவிடும்'' என்றார்.
சித்தார்த் குறிப்பிட்ட அந்த படம் ஹிந்தியில் அர்ஜூன் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் காட்சிகளும் அதிகம் இடம் பெற்றதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.