ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்று கணிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர் நித்தி அகர்வால். அறிமுகமே 'முன்னா மைக்கேல்' என்ற பாலிவுட் படத்தில்தான். அதன்பிறகு தெலுங்கிற்கு வந்த அவர் அங்கு மளமளவென நடித்தார். 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தர், 'பூமி' படத்தில் நடித்தார், கடைசியாக 'கலக தலைவன்' படத்தில் நடித்தார். இதற்கு இடையில் ஒரு இளம் தமிழ் நடிகருடன் லிவிங் டு கெதராக வாழ்கிறார். தெலுங்கு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து விட்டார் என பல தகவல்கள் வெளிவர அவரது மார்க்கெட் சரிந்தது.
தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார். தற்போது இரண்டு பெரிய படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார். பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரி ஹர வீரமல்லு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார், கிரிஷ் ஜெகன்னாத் இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். மெகா சூர்யா புரொடக்ஷன் தயாரிக்கிறது.
அடுத்து நித்தி அகர்வால் பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜா சாப்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மாருதி இயக்குகிறார், தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கிறது. மாளவிகா மோகனன், ரித்தி குமார், யோகி பாபு, வரலட்சுமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விடலாம் எனறு நித்தி உறுதியாக நம்புகிறார்.