திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணைந்திருக்கும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு சிம்பு நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் தக் லைப் படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களுக்கு டில்லியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் ஓரிரு மாதங்கள் தக்லைப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத கமல், இந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போகிறார். அந்த வகையில், டில்லியில் கமல், சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாகிறது. இங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் பங்கேற்று நடிக்க இருப்பதாகவும் படகுழு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.