சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு நடிகர் சங்க நிர்வாகத்தில் நடந்த குழப்பங்கள், தேர்தல்கள், வழக்குகளால் 40 சதகிவித பணியோடு சங்க கட்டிடம் நின்று போனது. முன்பு திட்டமிட்டடதை விட இப்போது கட்டித்தின் பட்ஜெட் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது.
இதனால் நடிகர் சங்கம் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளிடம் நிதி கேட்டு வருகிறது. அதோடு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஆகியோர் கட்டிட நிதியாக தலா ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கட்டிட நிதியாக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து 50 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.