தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் 'அமரன்'. பத்து வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் 25ம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய படம்தான் இந்த 'அமரன்'.
இன்று அவருடைய் நினைவு நாளை முன்னிட்டு 'அமரன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் துணிச்சலான இரண்டு ஹீரோக்கள் மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம் ஆகியோர் தங்கள் உயர்ந்த தியாகத்தைச் செய்தனர். இந்த அழியாத ஆன்மாக்களுக்கு எமது அஞ்சலியையும், மரியாதையையும் செலுத்துகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.