துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. “பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா” ஆகிய படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மலையாள நடிகர்களான சுராச் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து விக்ரம் மேலாளர் சூர்யநாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “வீர தீர சூரன்' படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக, மிக, மிக அதிகமாக உள்ளது. இன்று அனைவரின் நல்லாசியுடன் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு துவக்கம். அவர்களின் எதிர்பார்ப்பைவிட பன் மடங்கு 'வீர தீர சூரன்' பூர்த்தி செய்து, மிகப் பெரிய வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்பதில் உறுதியுடன், இறைவனின் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.