ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என அடுத்து எந்த முன்னனி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை.
இதனால் தான் ஏற்கனவே இயக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து இயக்கியுள்ளார். இதன் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. இது அல்லாமல் விரைவில் ஓடிடி தளத்திற்காக பூஜா ஹெக்டேவை வைத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்காக ஜூனியர் என்டிஆர் உடன் தற்போது பேச்சுவார்த்தையை அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.