இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'மாலையில் யாரோ மனதோடு பேச...' என தமிழ் ரசிகர்களின் இதயத்தில் ஆனந்தத்தையும், கண்களில் ஆனந்த கண்ணீரையும் ஒரே நேரத்தில் வரவழைத்தவர் பின்னணி பாடகி சொர்ணலதா. 'போவோமா ஊர்கோலம்' என உற்சாகம் தந்தார். 'ஆட்டமா தேரோட்டமா' என்று பாடி ஆட வைத்தார், 'போறாளே பொண்ணுத்தாயி' என கதற வைத்தார். 'ராக்கம்மா கையைத்தட்டு' எனச் சொடக்குப்போட வைத்தார். ஆனால் சொடக்கு போடும் நேரத்தில் இந்த உலகை விட்டும் பறந்தார்.
ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்த சொர்ணலதா 14 வயதில் பாட தொடங்கினார். 21வது வயதில் தேசிய விருது பெற்றார். 37 வயதில் இறந்து போனார். 'ஏனம்மா இத்தனை அவசரம்' என இசை உலகம் கண்ணீர் விட்டது. தனது பாடல்களால் மற்றவர்களின் கவலையை மறக்கச் செய்தவர், கவலையிலேயே வாழ்ந்தார் என்பதுதான் பெரிய சோகம். திருமணம் செய்து கொள்ளாமல் கடைசி வரை இசைக்காக வாழ்வதாக சொன்னவர். திருமண வயதில் மறைந்தது காலம் செய்த சூழ்ச்சி. திடீர் உடல் நலக்குறைவு, திடீர் மறைவு என முடிந்தது அவரது வாழ்க்கை.
சொர்ணலதா இன்று இருந்தால் அவருக்கு வயது 51. ஆம் இன்று அவருக்கு பிறந்தநாள். அவர் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை விருதுகள் அவரது கழுத்தை அலங்கரித்திருக்கும், எத்தனை பாடல்கள் நம் காதுகளை குளிரவைத்திருக்கும். மாலையில் யாரோ மனதோடு பேச கேட்கும்போதெல்லாம். அதுதான் நீ இருக்கிறாயே... காற்றாய்... இசையாய் என்று ஆறுதல் அடைய வேண்டியதிருக்கிறது.