இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை ஸ்ருதிஹாசன் இரண்டு, மூன்று காதல்களை கடந்து வந்தவர். கடைசியாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் பார்ட்டி, பங்ஷன்களில் ஜோடியாக சுற்றி வந்தனர்.
இருவரும் பிரிந்து விட்டதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை இருவருமே மறுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலை தளப்பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் அனைத்து படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். இதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டது உறுதியானது. எதற்குமே உடனடியாக விளக்கம் அளிக்கும் ஸ்ருதிஹாசன் இந்த விஷயத்தில் இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து சாந்தனுவை சமூகவலைத்தளத்தில் பின்தொடர்கிறவர்கள் தொடர்ந்து அவரிடம் கேட்டு வந்தனர். தற்போது சாந்தனு 'மன்னித்து விடுங்கள். இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்' என்று பதலளித்திருக்கிறார். இதன் மூலம் தங்களது பிரிவை சாந்தனு பிரிவை உறுதிப்படுத்தி உள்ளார்.