சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பகவதி, சென்னை 28, சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது கருப்பர் நகரம், பேபி அண்ட் பேபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை பிரக்யா நக்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெய், புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பிரக்யா நக்ரா தனது கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்க, ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் புத்தகத்தை வைத்தபடி போஸ் கொடுக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அவர்கள் திருமணம் செய்து செய்து கொண்டு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல தயாராகி விட்டது போன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது ஜெய்யும், பிரக்யாவும் இணைந்து பேபி அண்ட் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் சத்யராஜ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு பப்ளிசிட்டி தேடும் முயற்சியாக இப்படி ஒரு புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.