கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் 'கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சவுந்தர்யா, தற்போது அமேசான் ஓடிடி தளத்திற்காக வெப்தொடர் ஒன்றைத் தயாரித்து வருகிறார். நோவா இயக்கத்தில் 'கேங்ஸ் - குருதிப்புனல்' எனத் தலைப்பிடப்பட்ட அந்தத் தொடரில் அசோக் செல்வன், நாசர், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இத்தொடரின் படப்பிடிப்பு புதுச்சேரியல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சவுந்தர்யா. திட்டமிட்டதை விட இயக்குனர் அதிக செலவு செய்ததால் அமேசான் நிறுவனம் மேற்கொண்டு பணம் தர மறுத்துவிட்டதாம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சவுந்தர்யா படப்பிடிப்பை கேன்சல் செய்யச் சொன்னாராம். மேற்கொண்டு அமேசான் நிறுவனத்துடன் பேசி அவர்கள் கூடுதல் தொகை தர சம்மதித்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடர முடியும் நிலை என்கிறார்கள்.
படத்தில் பிஸியான நடிகர்கள், நடிகைகள் நடிப்பதால் மீண்டும் அவர்களது தேதிகளை வாங்கி படப்பிடிப்பு நடத்த இன்னும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாம்.