இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1500 படங்களுக்கு மேல் இசையமைத்து இசையில் சாதனை படைத்தவர் இளையராஜா. தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைக்கிறார். காப்புரிமை தொடர்பாக கடந்த சில தினங்களாக அவரைப்பற்றி பிரச்னைகள் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இளையராஜாவோ மொரீஷியஸ் தீவில் அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார். அங்குள்ள கடற்கரை ஒன்றில் தனியாக அலையை ரசித்துபடி இருக்கும் அவரின் போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் இளையராஜா. இந்த போட்டோ வைரல் ஆனது. இப்போது அவருடன் அவரது மகனும், இசையமைப்பாளருமான யுவன் இருக்கும் மற்றொரு போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஓட்டல் ஒன்றில் யுவனுக்கு உணவை ஊட்டி விட்டு மகிழ்கிறார் இளையராஜா. இந்த புகைப்படங்கள் வைரலாகின.