ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'பார்சி' தொடரில் ரேகாவாகவும், 'ராக்கெட் பாய்ஸ்' தொடரில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது விடாமுயற்சி, பிளாஷ்பேக், பார்டர் படங்களில் நடித்து வருகிறார்.
ரெஜினா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் கடற்கரையையும், கடலையும் சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் எஸ்யூபி மெரினா கிளப் குழுவினருடன் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ எனக்கு கடலும், கடற்கரையும் பிடித்தமான இடங்கள். அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதை செயல்படுத்தும் விதமாக மெரினா கிளப் குழுவினரோடு இணைந்து கொண்டேன். கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.