தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் அப்டேட் நாளை(இன்று) வெளியாகும் என்று நேற்று நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், இன்று(மே 6) அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், இந்த படத்திற்கு பைசன் காளமாடன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன், அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன் என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, பசுபதி, லால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.