தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் வெளியான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி, கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆகிய பக்தி படங்களை இயக்கியவர் 'ஓம்சக்தி' ஜெகதீசன். தேவி தரிசனம், தாய்மூகாம்பிகை, சுப்ரபாதம் ஆகிய படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 95 வயதான அவர் முதுமை காரணமாக நேற்று காலமானார். உடல் இன்று மாலை போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஓம் சக்தி ஜெகதீசனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒரே தாய் ஒரே குலம், இவர்கள் இந்தியர்கள் ஆகிய சமூக படங்களையும் இயக்கியுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில், நடுக்கடலில் பயணம் செய்யும் கப்பலில் படமாக்கப்பட்ட 'சிரஞ்சீவி' என்ற படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். டி.வியில் ஒளிபரப்பான 'மகான் ராமானுஜர்' என்ற தொடரை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி' படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு, சுமலதா நடித்த 'திசை மாறிய பறவைகள்' என்ற படத்தை இயக்கி, தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.