தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. வழக்கமான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை என்றாலும் அந்த படத்தின் கிளைமாக்சும், அதன் காரணமும் மக்களை கவர்ந்தது. படம் தற்போதும் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் பி.மணிவர்மனின் அடுத்த படம் தொடங்கி விட்டது.
இந்த படத்தை அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்திஷ் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.
ஒரு நொடி படத்தில் நடித்த தமன் குமார் இதிலும் நடிக்கிறார். மால்வி மல்கோத்ரா ஹீரோயின். இவர்கள் தவிர மைத்ரேயா, ரக்ஷா செரின் அருன் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். கே.ஜி. ரத்திஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.