தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்த பாலன். ஆனால் அவரது சமீபத்திய படங்களான ஜெயில், அநீதி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி உள்ளார். இதற்கு 'தலைமைச் செயலகம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமாரின் ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வருகிற 17ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் இந்த தொடர் அரசியல் பற்றி பேசுகிறது. கதைப்படி தமிழக முதல்வர் அருணாசலம், தன் மீதான 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கை எதிர்கொள்கிறார். இதனால் அவரை சுற்றி உள்ளவர்கள், அவரை வழக்கில் சிக்க வைத்து விட்டு முதல்வர் பதவியை அடைய நினைக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு முக்கியமான அரசியல் கொலையும் நடக்கிறது. இவற்றை கொண்டு பொலிட்டிக்கல் த்ரில்லராக தொடரை உருவாக்கி உள்ளார் வசந்தபாலன்.