பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்த பாலன். ஆனால் அவரது சமீபத்திய படங்களான ஜெயில், அநீதி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி உள்ளார். இதற்கு 'தலைமைச் செயலகம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமாரின் ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வருகிற 17ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் இந்த தொடர் அரசியல் பற்றி பேசுகிறது. கதைப்படி தமிழக முதல்வர் அருணாசலம், தன் மீதான 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கை எதிர்கொள்கிறார். இதனால் அவரை சுற்றி உள்ளவர்கள், அவரை வழக்கில் சிக்க வைத்து விட்டு முதல்வர் பதவியை அடைய நினைக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு முக்கியமான அரசியல் கொலையும் நடக்கிறது. இவற்றை கொண்டு பொலிட்டிக்கல் த்ரில்லராக தொடரை உருவாக்கி உள்ளார் வசந்தபாலன்.