ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தை முதலில் மது மந்தெனா, அல்லு அரவிந்த், நமித் மல்கோத்ரா மற்றும் பலர் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால், மது மந்தெனா, அல்லு அரவிந்த் இப்படத் தயாரிப்பிலிருந்து விலகிவிட்டனர்.
இந்நிலையில் மது மந்தெனா இப்படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கான மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதை வாங்குவதற்காக பிரைம் போகஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் முடிவு பெறாமல் உள்ளது. எனவே, தங்களது அனுமதி பெறாமல் இப்படம் குறித்த எதையும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தில் தன்னை இணை தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டார் கன்னட நடிகர் யஷ். படத்தில் இவர்தான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரும் நமித் மல்கோத்ரா இருவரும் இணைந்துதான் தற்போது படத்தைத் தயாரித்து வருகின்றனர்.