ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கமல்ஹாசன் தற்போது 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இப்படம் தவிர்த்து கமல்ஹாசனும் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். குறிப்பாக 'உத்தம வில்லன்' படம் குறித்த விவகாரம் ஒன்று கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குள்ளாகி வந்தது. அப்படத்தின் நஷ்டத்திற்காகத் தங்களுக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், அதன்படி அவர் நடிக்கவில்லை என 'உத்தம வில்லன்' தயாரிப்பாளர்களான இயக்குனர் லிங்குசாமி, அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸ் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்து அதற்கான பேச்சுவார்த்தை இன்று(மே 10) நடைபெற்றது.
இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் சிம்பு நடிக்கக் கூடாதென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.'கொரானோ குமார்' படத்தில் நடித்து முடித்த பிறகே அவர் 'தக்லைப்' படத்தில் நடிக்க வேண்டும் என அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே 'தக் லைப்' படத்தில் நடிக்கவிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் விலகிய நிலையில் தற்போது சிம்பு அதில் புதிதாக சேர்ந்துள்ளார். ஐசரி கணேஷ் புகாரை அடுத்து அதற்கும் சிக்கல் வந்துள்ளது.
கமல்ஹாசனை நோக்கியும், அவரது படத்தை நோக்கியும் அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளது திரையுலகில் தற்போதைய பரபரப்புப் பேச்சாக உள்ளது.