சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
நடிகர் சிவகுமார் பாணியில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை விஜய் கவுரவிக்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு 1500 மாணவர்களை அழைத்து கவுரவித்து, அவர்களுக்கு விருந்தளித்தார். அதேபோன்று இந்த ஆண்டும் செய்ய இருக்கிறார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ்நாடு, புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.