ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் தற்போது நடித்து வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு துபாய் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறைவில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, ஸ்ரீதேவி வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள மும்பை லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு (சவுக்) 'ஸ்ரீதேவி கபூர் சவுக்' என பெயரிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.