மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி மீண்டும் தீவிரமாகி உள்ளது. கடந்தமுறை நாசர் தலைமையிலான அணியினர் பொறுப்பேற்ற பிறகு இந்த பணிக்கான பூஜைகள் நடந்து அதன்பின் பணிகள் மும்முரமாய் நடந்து வந்தன. பின்னர் ஏற்பட்ட நிதி தட்டுப்பாடு, நடிகர் சங்க தேர்தல் வழக்கு போன்ற பிரச்னையால் பணிகள் நின்று போகின. மீண்டும் நாசர் அணியினர் பொறுப்பேற்ற பின்னர் இந்த பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளன.
சங்க கட்டடம் கட்ட கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார். இதற்காக தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனுஷிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.