தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தமிழகத்தில் உள்ள பல பிரபலங்களும் இந்த படங்களுக்கான பாராட்டுகளை மனம் திறந்து தெரிவித்தனர். கமல், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதும் நடந்தது. இதில் பிரேமலு படத்தை இயக்குனர் கிரிஷ் ஏடி என்பவர் இயக்கியிருந்தார். அழகான காதல் கதையை நகைச்சுவை கலந்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருந்தார்.
அதனால் மலையாளத்தை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழிலும் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தனது ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்குமாறு பிரேமலு இயக்குனரிடம் கமல் கேட்டுக் கொண்டதாகவும், அதை அவர் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது பிரேமலு படத்தை தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறி இந்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.