தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மணயில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தை சேர்ந்த பாக்கியம் சினிமாவில் அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆந்திரா, கன்னடம், மலையாளத்திலிருந்து நடிகைகள் வந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நடிக்க வந்தவர்களில் முக்கியமானவர்.
நாடகங்களில் நடித்து வந்த பாக்கியம், ஜூபிடர் பிலிம்சில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து அவர் நடித்த படம் 'வித்யாபதி'. 1946ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி. எம்.என்.நம்பியார் ஜோடியாக பாக்கியம் நடித்தார். ராஜகுமாரி, கஞ்சன், மோகினி, வேலைக்காரி, கன்னியின் காதலி, மர்மயோகி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மர்மயோகியின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.