தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில் சமீப நாட்களாக நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் அவரை வைத்து ‛வழக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ள சனல்குமார் சசிதரன் ஆகியோருக்கு இடையே இந்த படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்தாலும் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டதால் தனது இமேஜ் பாதிக்கும் என்று இந்த படத்தை வெளியிட டொவினோ தாமஸ் மறுக்கிறார் என்று சணல்குமார் சசிதரன் குற்றம் சாட்டினார். ஆனால் தியேட்டரில் வெளியிட்டால் இந்த படத்திற்கு நட்டம் வரும் என்றும் அதே சமயம் இயக்குனர் மீது உள்ள கெட்ட பெயரால் ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க மறுக்கின்றன என்று விளக்கம் அளித்து இருந்தார் டொவினோ தாமஸ்.
இந்த நிலையில் டொவினோ தாமஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார் என்கிற ஆத்திரத்தில், “ஒரு படம் என்பது பூட்டி வைப்பதற்காக அல்ல.. ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்காகத்தான்..” என்று கூறி இதன் பிரிவியூ காபி லிங்க்கை தனது பேஸ்புக் பக்கத்தில் தயாரிப்பாளரின் அனுமதி இன்றி சமீபத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் இயக்குனர் சணல்குமார். இவரது செயல் படத்தின் தயாரிப்பாளர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காப்பிரைட் சட்டத்தின்படி அவரது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த படத்தின் பிரிவியூ காப்பி நீக்கப்பட்டது. மேலும் வழக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் அனுமதி இன்றி இயக்குனர் இப்படி படத்தின் பிரிவியூ காப்பியை பொதுவெளியில் வெளியிட்டது குறித்து அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.