வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மேடைபேச்சு, பட்டிமன்றம் மூலம் புகழ்பெற்றவர் சந்தியா. 'சவுண்டு சந்தியா' என்ற அவருக்கு பட்டப்பெயர்கூட உண்டு. தனது பேச்சுதிறனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு 'கண்மணி' சீரியலில் அறிமுகமான சந்தியா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சக்திவேல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'மெட்டி ஒலி' சாந்தியின் மருமகளாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தியின் நிஜ மருமகளாகவும் சந்தியா ஆகிறார். சாந்தியின் மகன் முரளிக்கும், சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இது பெற்றவர்கள் முடிவு செய்த திருமணமாம். திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது. அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மாமியாருக்கும், மருமகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.