ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபனும் ஒருவர். இந்த நிலையில் இந்த இறுதி கட்டத்தில் புஷ்பா 2வில் இருந்து ஆண்டனி ரூபன் தற்போது விலகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர்களில் ஒருவராக பல படங்களுக்கு பட தொகுப்பு செய்து வரும் ஆண்டனி ரூபன் ஏற்கனவே இங்கே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக பணியாற்றி வருவதால் புஷ்பா 2 படத்திற்கு தன்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளியே பகிரங்கப்படுத்த விரும்பாத புஷ்பா 2 படக்குழு அவருக்கு பதிலாக குண்டூர் காரம். வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய நவீன் நூலியை வைத்து புஷ்பா 2 படத்தின் பணிகளை தொடர இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.