'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபனும் ஒருவர். இந்த நிலையில் இந்த இறுதி கட்டத்தில் புஷ்பா 2வில் இருந்து ஆண்டனி ரூபன் தற்போது விலகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர்களில் ஒருவராக பல படங்களுக்கு பட தொகுப்பு செய்து வரும் ஆண்டனி ரூபன் ஏற்கனவே இங்கே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக பணியாற்றி வருவதால் புஷ்பா 2 படத்திற்கு தன்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளியே பகிரங்கப்படுத்த விரும்பாத புஷ்பா 2 படக்குழு அவருக்கு பதிலாக குண்டூர் காரம். வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய நவீன் நூலியை வைத்து புஷ்பா 2 படத்தின் பணிகளை தொடர இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.