ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் பெயர் வாங்கிய தமிழ் கதாநாயகிகளை அதிகம் பார்க்க முடியாது. மற்ற மொழிகளில் இருந்து இங்கு நடிக்க வந்து பெயர் வாங்கியவர்கள்தான் அதிகம். குறிப்பாக மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் என்றாலே நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பேரார்வம் வந்துவிடும். நீண்ட காலமாக மலையாளத்திலிருந்து வந்த நயன்தாராதான் தமிழில் நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார்.
அவரும் இப்போது சீனியர் நடிகையாகிவிட்டார். அதனால், அவருக்கான மவுசும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. எனவே, ரசிகர்கள் வேறு மலையாள நடிகைகள் பக்கம் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு, 'குருவாயூர் அம்பலநடையில்' புகழ் அனஸ்வரா ராஜன் ஆகியோர்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
அனஸ்வரா ராஜன் 2022ல் வெளிவந்த 'ராங்கி' தமிழ்ப் படத்திலும் 2023ல் வெளிவந்த 'தக்ஸ்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அப்பேதெல்லாம் அவரை கண்டு கொள்ளாத ரசிகர்கள் இப்போது அனஸ்வராவை தங்களது ஆஸ்தான கதாநாயகியரில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அவர் சீக்கிரமே தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள்.
'பிரேமலு' புகழ் மமிதா பைஜு, மார்ச் மாதம் வெளிவந்த 'ரெபல்' தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து அவர் எப்போது தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதுவரையில் மமிதாவின் வீடியோக்கள் பலவற்றையும் வைரலாக்கி வருகிறார்கள்.
மமிதா, அனஸ்வரா இருவரில் யார் தமிழில் முன்னணி நடிகையாகப் போகிறார்கள் என்பது அடுத்து அவர்கள் நடிக்கப் போகும் படங்களின் மூலமே தெரிய வரும்.