இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் பெயர் வாங்கிய தமிழ் கதாநாயகிகளை அதிகம் பார்க்க முடியாது. மற்ற மொழிகளில் இருந்து இங்கு நடிக்க வந்து பெயர் வாங்கியவர்கள்தான் அதிகம். குறிப்பாக மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் என்றாலே நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பேரார்வம் வந்துவிடும். நீண்ட காலமாக மலையாளத்திலிருந்து வந்த நயன்தாராதான் தமிழில் நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார்.
அவரும் இப்போது சீனியர் நடிகையாகிவிட்டார். அதனால், அவருக்கான மவுசும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. எனவே, ரசிகர்கள் வேறு மலையாள நடிகைகள் பக்கம் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு, 'குருவாயூர் அம்பலநடையில்' புகழ் அனஸ்வரா ராஜன் ஆகியோர்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
அனஸ்வரா ராஜன் 2022ல் வெளிவந்த 'ராங்கி' தமிழ்ப் படத்திலும் 2023ல் வெளிவந்த 'தக்ஸ்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அப்பேதெல்லாம் அவரை கண்டு கொள்ளாத ரசிகர்கள் இப்போது அனஸ்வராவை தங்களது ஆஸ்தான கதாநாயகியரில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அவர் சீக்கிரமே தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள்.
'பிரேமலு' புகழ் மமிதா பைஜு, மார்ச் மாதம் வெளிவந்த 'ரெபல்' தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து அவர் எப்போது தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதுவரையில் மமிதாவின் வீடியோக்கள் பலவற்றையும் வைரலாக்கி வருகிறார்கள்.
மமிதா, அனஸ்வரா இருவரில் யார் தமிழில் முன்னணி நடிகையாகப் போகிறார்கள் என்பது அடுத்து அவர்கள் நடிக்கப் போகும் படங்களின் மூலமே தெரிய வரும்.