ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரி அடுத்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கருடன்'. ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை(மே 21) சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் தனி கதாநாயகனாக நடித்து முதல் வெற்றியைப் பெற்ற 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர்தான் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான 'காக்கி சட்டை' படமும் வெற்றி பெற்ற படம்தான்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருமே நாளை ஒன்றாகக் கலந்து கொள்ளும் விழா என்பதால் 'கருடன்' இசை வெளியீட்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.