இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரி அடுத்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கருடன்'. ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை(மே 21) சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் தனி கதாநாயகனாக நடித்து முதல் வெற்றியைப் பெற்ற 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர்தான் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான 'காக்கி சட்டை' படமும் வெற்றி பெற்ற படம்தான்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருமே நாளை ஒன்றாகக் கலந்து கொள்ளும் விழா என்பதால் 'கருடன்' இசை வெளியீட்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.