தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். இதில் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் முழு வீச்சில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித். ஜூன் மாதம் இறுதியில் இருந்து விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் திட்டப்பட்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விடும் அஜித், அடுத்தபடியாக சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியிருக்கும் அவர் ஏற்கனவே அஜித் இடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் ராஜாவும் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையும் அஜித்துக்கு பிடித்து விட்டதால், கைவசம் உள்ள இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக சிவா, மோகன் ராஜா ஆகிய இருவரின் படங்களிலும் நடிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.