ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் தொடர்ந்து அவருடன் தான் எடுத்துக் கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென்று சாந்தனுவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வதை நிறுத்தினார். இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளுக்கும் சோசியல் மீடியாவில் சாந்தனு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது அவர்களது பிரேக்அப்பை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள், தற்போது நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ருதிஹாசன், நான் சிங்கிள்தான் மிங்கிளாக விரும்பவில்லை. என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.