சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாரதிராஜா இயக்கிய ‛அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் வில்லனாக தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தியாகராஜன். அதன்பிறகு, மம்பட்டியான் படத்தில் நடிப்பில் அசத்தியிருந்தார். 80களில் தவிர்க்க முடியாத நடிகராகவும் ஆனார். தொடர்ந்து, பாயும் புலி, கொம்பேரி மூக்கன், நீங்கள் கேட்டவை, பூவுக்குள் பூகம்பம் என்று ரசிகர்கள் மனதில் நின்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தவர், ஆணழகன், சேலம் விஷ்ணு, ஷாக், பொன்னர் சங்கர் போன்ற படங்களை பிரமாண்டமாக இயக்கினார். தற்போது ‛பி டி சார்' படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன், காலேஜ் சேர்மன், என்ற நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். படத்தில் நடிகை அனிகா சுரேந்தரை இவர் பாலியல் துன்புறுத்தல் செய்வது போல சில காட்சிகள் எடுக்கபட்டதாம். ஆனால் அவ்வாறு நடிப்பதில் தியாகராஜன் பெரும் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த வயதில், ஒரு சிறு குழந்தையை வைத்து இப்படி ஒரு காட்சி நடிக்க சொன்னால், அது பொதுமக்கள் மத்தியில் சரியாக இருக்குமா, தவறாக என்னை சித்தரித்து விமர்சனம் செய்ய மாட்டார்களா என்றெல்லாம் தயங்கி, தன் நட்பு வட்டத்தில் பேசி உள்ளார். ஒரு காட்சியில், ஆதி இவரை கன்னத்தில் அறைவது போல படத்தில் உள்ளது. ஆனால் அந்த காட்சிக்கு இயக்குனர் டூப் போட்டு எடுத்ததாக சொல்கிறார். தியாகராஜன் இப்படி நடிக்க தயங்கினாலும், படம் பார்த்த பலரும், அவரது நடிப்பை வெகுவாக பாராட்டுகின்றனர்.