ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2024ம் ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படம் என்ற பெருமையைப் பெற்ற படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கம் நடிப்பில், கதாநாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்க இப்படம் இந்த மாதம் 3ம் தேதி வெளியானது. இரு தினங்களுக்கு முன்பு இப்படம் 25வது நாளைத் தொட்டது. கடந்த வாரம் 100 கோடி வசூலையும் கடந்தது. அதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இந்த வருடம் வெளிவந்த படங்களில் 25 நாட்களைக் கடந்த படங்களாக “அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, வடக்குபட்டி ராமசாமி, லவ்வர், சைரன்,” ஆகியவை அமைந்தன. அந்த வரிசையில் தற்போது 'அரண்மனை 4' படமும் சேர்ந்துள்ளது. முந்தைய 25 நாள் படங்கள் அத்தனை நாட்கள் ஓடினாலும் லாபம் தராத படங்களாகவே இருந்தன. 'அரண்மனை 4' மட்டும்தான் லாபத்தையும் தந்த படமாக அமைந்தது.
'அரண்மனை 4' படம் வெற்றி பெற்றதால் இயக்குனர் சுந்தர் சி 'அரண்மனை 5' படத்தையும் உருவாக்க வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் தமிழில் முதல் முறையாக உருவாகும் 5ம் பாகப் படம் என்ற பெருமையைப் பெறும்.