தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2013ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் 'தீக்குளிக்கும் பச்சை மரம்'. மருத்துமனை பிணவறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதனை எம்.வினீஸ் இயக்கி இருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரஜன், சரபு நடித்திருந்தார்கள்.
11 வருடங்களுக்கு பிறகு வினீசும், மது அம்பாட்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'ஜோரா கைய தட்டுங்க'. இதனை வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரித்துள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஹரீஷ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ஶ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி வினீஷ் கூறும்போது, “இது முழுக்க முழுக்க ஜாலியான படம். யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் . படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்” என்றார்.