இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் முடிந்த சில நாட்களிலேயே அபுதாபி சென்றார். அங்கு ஐயக்கிய அமீரக அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்த சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இரண்டு வார ஓய்விற்குப் பிறகு நேற்று சென்னை திரும்பினார்.
அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. அதற்குள் இமயமலை சென்று திரும்ப எண்ணிய ரஜினி இன்று(மே 29) இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛இந்தியா மட்டுமல்ல, உகத்திற்கே ஆன்மிகம் தேவை. ஆன்மிகம் என்றால் சாந்தியும் சமாதானமும்'' என்றார். தொடர்ந்து அவரிடம் ‛இசையா, கவிதையா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛நோ கமென்ட்ஸ்' என்றார். மேலும் அவரிடத்தில் ‛பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‛‛மன்னிக்கவும், அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க'' என தெரிவித்தார்.