தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழ் நடிகரான கவுதம் கார்த்திக் உடன் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தார். அந்த படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்து அப்போது பல வதந்திகள் வந்தன. அதற்கு விளக்கம் அளித்து தற்போது மஞ்சிமா மோகன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய திருமணம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்றும் பல பொய்யான தகவல்கள் பரவின. இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தனர்.
என்னை உடல்கேலி செய்து காயப்படுத்தும் கருத்துகள் வெளிவந்தபோது நான் வருந்தவில்லை. அது அவர்களின் பார்வைகோளாறு என்றே கருதி வந்தேன். ஆனால் திருமணத்துக்குப் பின் இது குறித்து கவலைப்பட்டிருக்கிறேன். நான் கவுதமுக்கு ஏற்ற ஜோடியில்லை என்ற கருத்துகளை கேட்கும்போது மனது வலிக்கும். அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன்.
தம்பதியினர் தங்கள் சமூகவலைதளங்களில் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் பயத்தால் அதை செய்வதில்லை. எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் சக்தியை கவுதமின் காதலும் அன்பும் எனக்கு தந்திருக்கிறது.
இவ்வாறு மஞ்சிமா கூறியுள்ளார்.