இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்கான வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தின் வினியோக உரிமை சுமார் 150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். பிரபாஸ் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகத் தொகை என்கிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவரது படங்கள் அந்த அளவிற்கு வசூலைக் குவிக்கவில்லை. ஆனால், 'கல்கி 2898 ஏடி' படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.