தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயல்பாகவே அமைதியும், கூச்ச சுபாவமும் உடையவர். மெதுவாகத்தான் பேசுவார். அதிலும் தற்போது அவரது மகள் மறைவுக்கு பிறகு இன்னும் அமைதியாகி விட்டார். அவரது பேச்சில் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபகாலங்களில் அவர் காலில் செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார். ஏதாவது வேண்டுதலாக இருக்கலாம் என்று எல்லோரும் கருதி வந்தார்கள். ஆனால் இனி செருப்பு அணிய மாட்டேன் என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐதராபாத்தில நடந்த அவரின் 'மழை பிடிக்காத மனிதன் ' பட புரமோஷன் நிகழ்வில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது “நான் சில நாட்களுக்கு முன் செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது. செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லதுதான். அது மட்டுமின்றி நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.