ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதையடுத்து சமீபத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அபுதாபிக்கு சென்ற ரஜினிகாந்த் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் தனது மனைவி ராதிகா மற்றும் மகனுடன் அபுதாபி நாராயணன் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், அபுதாபி சுவாமி நாராயணன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். அமைதி, நல்லிணக்கம் கொண்ட இந்த ஆலயத்துக்கு நாங்கள் செல்வது இது மூன்றாவது முறையாகும். இந்த முறை மே 28ம் தேதி சென்றிருந்தோம். அங்கு காணப்பட்ட காட்சிகள் ஏற்பட்ட ஆன்மிக உணர்வுகள் அமைதியை தருகின்றன. அங்குள்ள சுவாமிஜியிடம் ஆசி பெற்று தெய்வீக தரிசனம் பெற்றோம் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார்.