வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று 81வது பிறந்தநாள். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது ஸ்டுடியோ முன்னால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்களும் திரையுலகினரும் திரண்டனர். அவர்களை இளையராஜா சந்தித்தார். பலருடன்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இளையராஜா மகளும், பின்னணி பாடகியுமான பவதாரினி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் இளையராஜா இந்த பிறந்தநாளில் உற்சாகமாக காணப்படவில்லை. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ''எல்லோரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள். ஆனால் எனது மகளை நான் பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை'' என்றார்.
இதனிடையே சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணை தூதர் ஒலெக் அவ்டீவ், இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக வந்தேன். அவர் ரஷ்யாவின் மிகச்சிறந்த நண்பர். மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஷ்ய இசை கலைஞர்களை வைத்து சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்துவார். இந்த நிகழ்ச்சியை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.